Wednesday 16 January, 2008

வருடம் முடிந்து
நாட்குறிப்பேட்டை
புரட்டுகையில் புரிகிறது
எத்தனை நாட்கள்
விணடிக்கப்பட்டிருக்கின்றன என்று..
.....................
பிறப்பு முதல்
இறப்பு வரை
வாழ்க்கை என்னும்
தொடர் ஓட்டப் போட்டியின்
இறுதி எல்லைக்கோடு தான்
மரணம்!.
.............
வருடம் முடிந்து
நாட்குறிப்பேட்டை
புரட்டுகையில் புரிகிறது
எத்தனை நாட்கள்
விணடிக்கப்பட்டிருக்கின்றன என்று..
......................
தோற்றுப்போய்
விடுவேனோ
எனப் பயந்தே
காதல் பரீட்சையை
எழுத விரும்பவில்லை..
...................
இயந்திரக் கோளாறில்
லிப்டில் சிக்கிய-பிறகுதான்
புரிந்தது கூண்டுக்கிளியின்
அவஸ்தை

.......................

காதல்
இல்லாமல் வாழ்கையில்
சுவாரஸ்சம் இல்லைத்தான்
ஆனால்-காதல் மட்டுமே
வாழ்க்கை இல்லை....

......................

No comments:

Post a Comment