Saturday 23 February, 2008

செவ்வானம் மையெழுத
வானம் முழுக்க
வெளிச்சம்
கலர் கலராய்..
நொடிக்கு நொடி
மாறும் உருவங்கள்
சின்ன கீற்றுக்களாய்...
தூரிகையின் சிதறல்களாய்
வண்ணப்புள்ளிகளின்
வர்ணயாலங்கள்....
ஓடி அலைந்து உருமாறி
கலைந்து போகும்
மேகக்கூட்டங்கள்...
நெருப்பு பந்தாய்
அந்தி சாயும் பகலவன்..
நிரை நிரையாய்
கூடு திரும்பும் புள்ளினங்கள்..
எத்தனை அழகை
தனக்குள் வைத்திருக்கிறது
இந்த இயற்கை.....

பாரதி !
எனக்குள் நீ
உன் கவிதைகளுக்குள் - நான்
தொலைந்து விட்டேன்!
இன்றும்
என்றும் நீ
வாழ்ந்து கொண்டிருப்பாய்
எனக்குள் !

Friday 22 February, 2008

சிரிக்க மறந்து
போன நான்கு
சுவர்களுக்குள்
மறக்காமல்
சிரிக்கிறது
"லாபிங் புத்தா"!
இனிய நட்பே
கடிதங்களில்
நம் உறவு தொடரும்
அந்நியம் வரும் என்று
நினைத்திருப்போமா..
எவ்வளவு அழகான

நாட்கள் அவை...
நாம் ஒன்றாய் இருந்த
அந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும் இப்போதும்....
போர் மேகங்கள் சூழ்ந்த

நம் நாட்டிலும்-நாம்
எவ்வளவு சந்தோசமாக
இருந்தோம்..
நாம் பிரிந்தாலும்

எம் நேசம் என்றும்
பிரியாமல் வாழட்டும் !
நீ
என்னிடம் பேசிய
வார்த்தைகளை விட
மெளனமாகிய
நிமிடங்களிலையே
அறிந்து கொண்டேன்
உன்னை அதிக்கம் !

Monday 4 February, 2008

எம்
அக்கினி குஞ்சுகள்
மூட்டிய தீயில்-உன்
மூச்சுக்குழலில் அல்லவா
மூண்டுவிட்டது நெருப்பு
உன் கோட்டைக்குள்
வெடிக்கும் வெடி
உனக்கு சாவுமணியல்லவா
உங்கள் இரும்புக்கோட்டை
கனவுக் கோட்டையானதே
தமிழர் படையால்..

துட்டகைமுனு கொன்ற
எல்லாளன் அல்லவா
புதுபிறவி எடுத்துயிருக்கிறான்
புலி மறவராய்..
எம் ஊர்களில்
கந்தக நொடி வீசியவனே
பொறுத்துக்கொள் இனி
உன் இதயத்திற்குள்ளும்
வெடி வெடிக்கும்....