Friday 25 January, 2008

அலைகளின்
புரட்டலில்
அலைக்கழியும்
ஒற்றைச் செருப்பு....
அஸ்தி கரைத்து
உடைத்து போட்ட
மண்பானை....
கரையாமல் கிடக்கும்
தந்தமற்ற விநாயகர்...
விசியெறிந்த பூமாலை..
குட்டி நண்டுகளுக்காய்
காத்திருக்கும் காக்கைகள்....
மிதிபட்டு இறந்து போன
சின்ன உயிரனங்கள்...
காலைக் கடனாய்
கடற்கரையில்
முடித்துவிட்ட
மனித எச்சங்கள்...

தூரத்தில் பார்க்கையில்
கடல் கொள்ளை அழகுதான்
..

No comments:

Post a Comment