Thursday 17 January, 2008


பூவின் வாசம் வேண்டும்!
காற்றின் வேகம் வேண்டும்!

குயிலின் இனிமை வேண்டும்!
மழையின் சாரல் வேண்டும்!

மழலையின் உள்ளம் வேண்டும்!
தென்றலின் மென்மை வேண்டும்!

வாழ்வில் அமைதி வேண்டும்!
இயற்கையின் அணைப்பு வேண்டும்!

இதமாய் வார்த்தை வேண்டும்!
தட்டிக் கேட்கும் துணிவு வேண்டும்!

தயவாய் அணைக்கும் தோழமை வேண்டும்!
நட்பாய் பழகும் பெற்றோர் வேண்டும்!

தோள் கொடுக்கும் உடன்பிறப்பு வேண்டும்!
தோல்வியை தாங்கும் இதயம் வேண்டும்!

விழுந்தாலும் எழும் இதயம் வேண்டும்!
வீரராய் சாகும் வாழ்வு வேண்டும்!

கனிவாய் என்றும் காதல் வேண்டும்!
காலம் முழுக்க கவிதை வேண்டும்!

எம்மண் என்னை அழைக்க வேண்டும்!
உன்னில் என்னை விதைக்க வேண்டும்!
என்னை உன்னில் கரைக்க வேண்டும்!
இதுவே என்வாழ்வாய் வேண்டும்!

No comments:

Post a Comment