Thursday 17 January, 2008

வேண்டும் எமக்கு விடுதலை.......


நெடிய பயணம்
இதுவரை கொடுத்த
விலைகளும் அதிகம்
வீடு இழந்தோம்
ஊர் இழந்தோம்
சொத்து இழந்தோம்
சொந்தம் இழந்தோம்
இன்றுநாடும் பிரிந்து
அகதி என்னும்
முத்திரையுடன்
அயல் நாட்டில் குடி புகுந்தோம்!
போதும் இந்த அவலங்கள்
விரக்திகள் வேதனைகள்
இனியும் வேண்டாம்!
இந்த போர் மேகங்கள்
எம் அடுத்த சந்ததியாவது
நின்மதியாய் சந்தோசமாக
வாழ வேண்டும்-எம்
தாய் மண்ணில்..வேண்டும்
எமக்கு விடுதலை
அடுத்த தலைமுறையாவது
விடியலில் வாழட்டும்!

No comments:

Post a Comment