Saturday 26 January, 2008

சந்தோசம் தரவில்லை
வெளிநாட்டு வாழ்க்கை
சவரில் குளிக்கும் உடல்
மனது மட்டும்
கிணற்றடி துலாவோடு...
இதமான ஏசியில்
முற்றத்து
வேப்பமரக் காற்று
நினைவை வருடுகிறது..

பீசாவும் பர்க்கரும்
வாயை அடைக்கையில்
அம்மாவின் புட்டும்
சிவப்பரிசி கஞ்சிக்கு
ஏங்கி தவிக்கிறது...

வாழ்க்கையை தொலைத்து
விட்டுநிழலை அல்லவா
துரத்துக் கொண்டிருக்கிறோம்
வாழ்கிறோம் எனச்சொல்லி
ம்ம்ம்..... நாமும்
வாழ்கிறோம் வெளிநாட்டில்......

No comments:

Post a Comment