Wednesday 16 January, 2008

ஏன் சீறினாய் கடலன்னையே?


ஏன் சீறினாய்
கடலன்னையே ?
யார் மேல் இந்த கோபம்
அப்பாவி உயிர்களை
காவு கொண்டதில்
அப்படியென்ன குரூர
சந்தோசம் உனக்கு..
உன் கோபத்தை
என் நாட்டிலுமா காட்டுவது...
போரினால்
ஊர் இழந்தோம்
உடமை இழந்தோம்
ஆனால்....
உடுத்திருந்த உடையையும்
அல்லவா நீ
எடுத்துச் சென்றாய்
எல்லாம் இழந்து
நிற்கிறதே என் இனம்!

யுத்ததால் நாம் இழந்தது
போதவில்லையா உனக்கு?
எத்தனை உயிர்களை
பலி கொடுத்தோம்-நீ
மட்டும் விட்டுவைத்தாயா எம்மை
படகேறியவர்களை பாடையெற்றினாயே!
உன் ரத்த வேறி அடங்கவில்லையா?
நீயே முந்திக் கொண்டு
உள்ளே பாய்ந்தது ஏனம்மா?

பச்சைக் குழந்தைகளின்
பால் வடியும் முகத்தை
பார்த்த பின்பாவது
ஓய்ந்து இருக்கலாமே..
நீயும் கூட சிங்களவர்களோடு
கூட்டு சேர்ந்துவிட்டாயா?
வருங்கால புலிக்குட்டிகளை அழிக்க...

உன் அலைக்கரங்களில்
தவழ்ந்த புதல்வர்களையா
நீ அழித்தாய்?
தணிந்ததா உன் கோபம்....

போரினால்
அனைதையும் இழந்த பின்னும்
நிமிர்ந்து நின்றதே என் தேசம்
நீயோ ஆணிவேரை அல்லவா
பிடிங்கி எறிந்து விட்டாய்..
ஆனாலும்
நாங்கள் எழுவோம்!
பினிக்ஸ் பறவையை போல
பார்த்துக்கொண்டிரு
உன்னில் தான் எங்கள் பயணமும்...

இத்தனை உயிருடன்
நிறுத்திவிடு உன் வெறியை
என் தேசம்
கொஞ்சம் நிமிரட்டும்
உன்னை எதிர்தே - நாம்
நிற்போம் நாளை!

No comments:

Post a Comment