
நானும் வாழ்ந்திருந்தேன்
ஒரு நாள்..
தென்னை மர அணிலோடும்
ஜன்னல் குருவி
சிட்டுக் குருவியோடும்
ஸ்நேகமாயிருந்தேன்..
வேப்பமரக் காற்றிலும்
பூவரச இலை பீப்பியோடும்..
என் வீட்டு
முற்றிய மாங்காய்விட்டு
பக்கத்து வீட்டு
மதிலேறிய
கிளிச்சொண்டு மாங்காயும்
இலந்தைப் பழமும்
நாவில் இனிக்கிறது.....
மாரிக்கால தவளையும்
அதிகாலை திருவெண்பாவையும்
காதுகளில் கேட்கின்றன..
முருகன் கோயில்
கொன்றை மரமும்
வெள்ளதில் நடக்கும்
சூரன் போரும்
இப்போதும் கண்முன்னெ...
வயல் வெளியில் நடக்கையில்
கடித்து துப்பிய அடிநெல்லும்
மிளகாய் தோட்ட
பரண் காவலும்
இன்னும் நெஞ்சுக்குள்....
விரசமற்ற தொடுகையோடு
கைபிடித்து பள்ளி சென்ற
முகம் மறந்த தோழர்களும்
சின்ன சண்டைகளும்
சிதறடிக்கும் சிரிப்புக்களுக்கும்
மனசு ஏங்குகிறது....
இத்தனையோடும் நானும்
வாழ்ந்திருந்தேன்
ஒரு நாள்....
இராணுவ வல்லூறுகள்
என் மண்ணை
சிதைக்கும் வரை.....
ஒரு நாள்..
தென்னை மர அணிலோடும்
ஜன்னல் குருவி
சிட்டுக் குருவியோடும்
ஸ்நேகமாயிருந்தேன்..
வேப்பமரக் காற்றிலும்
பூவரச இலை பீப்பியோடும்..
என் வீட்டு
முற்றிய மாங்காய்விட்டு
பக்கத்து வீட்டு
மதிலேறிய
கிளிச்சொண்டு மாங்காயும்
இலந்தைப் பழமும்
நாவில் இனிக்கிறது.....
மாரிக்கால தவளையும்
அதிகாலை திருவெண்பாவையும்
காதுகளில் கேட்கின்றன..
முருகன் கோயில்
கொன்றை மரமும்
வெள்ளதில் நடக்கும்
சூரன் போரும்
இப்போதும் கண்முன்னெ...
வயல் வெளியில் நடக்கையில்
கடித்து துப்பிய அடிநெல்லும்
மிளகாய் தோட்ட
பரண் காவலும்
இன்னும் நெஞ்சுக்குள்....
விரசமற்ற தொடுகையோடு
கைபிடித்து பள்ளி சென்ற
முகம் மறந்த தோழர்களும்
சின்ன சண்டைகளும்
சிதறடிக்கும் சிரிப்புக்களுக்கும்
மனசு ஏங்குகிறது....
இத்தனையோடும் நானும்
வாழ்ந்திருந்தேன்
ஒரு நாள்....
இராணுவ வல்லூறுகள்
என் மண்ணை
சிதைக்கும் வரை.....
4 comments:
ஹீ ஹீ ஹீ ரொம்ப தான் feel பண்றீங்க.... cool cool
:((( Unmaiyaana ekkangal... kavithai vazakkampol arumai...
நன்றிகள் கஜா
நன்றிகள் ஜி
Post a Comment