Tuesday 18 March, 2008

எனக்காய் வாழ்வதேற்போது....


பெண்ணாய் பிறந்த நானும்
வாழ்கிறேன் இன்னோருவருக்காகவே
குழந்தையாய் இருந்தபோது
தந்தை என்னும் ஆணின்கீழ்..
கொஞ்சம் வளர்ந்தபின்

சகோதரனோடு
திருமண பந்தத்தால்
கணவன் என்னும் ஆணோடு
நாளை வாழ்ந்திருப்பேன்
மகனுக்காய்...

என் சுயங்களை மறந்துவிட்டு

இல்லை மறைத்துவிட்டு..
எனக்கான
விருப்பு வெறுப்பு
தேடல்கள் ஆசைகள்
அனைத்தையும் தொலைத்துவிட்டு
விரும்பியோ விரும்பாமலோ
ஆணை சுற்றியே
அமைந்துவிட்ட இவ்வுலகம்
எனக்காய் வாழ்வதேற்போது....

என்வாழ்விங்கே..


ஒவ்வொரு முறையும்
புன்னகைக்கின்றேன்
பார்த்தும் பாராமல் கடக்கும்
உங்களுக்காய்..
ஒரிரு நிமிடங்களே தரித்தாலும்
என் விரல்களால் காற்றோடு
கையசைக்கின்றேன் உங்கள் பார்வை
என்மீது படாதா என்னும் ஏக்கத்துடன்..

தெருவேர வெப்பக்குவியலோடு

நைந்துபோன என்னையின்
புடவையின் வேர்வையுடனும்
என்வாழ்விங்கே...

எல்லோரும் பார்க்கிறீர்கள்

உங்கள் பார்வைகள்தான் மாறுகின்றன
அதிசயமாய்..
அருவருப்பாய்..
முணுமுணுப்புடன் கடக்கும் உங்களுக்கு
எத்தனை வேலைகள்
எனக்காக நிதானிக்க நேரமேது...

நான் என்ன வரமா பெற்றுவந்தேன்

என் வாழ்விங்கே வாழ்வதற்கு..
கோழை ஆணின்
ஒருநேர சுகத்திற்காய் பெற்றுவிட்டாள்
என்னன்னை
என்ன பாவம் செய்து வந்தேன்

ஒற்றை ரூபாயை
வீசியேறியும் கைகளுக்கு
தெரியுமா நான்
நாளை
யாராவெனென்று...

Saturday 15 March, 2008

என் இந்திய நட்பே
என்ன சொல்லி புரிய வைப்பேன்
என் மண்ணை..
வீட்டு விருந்தாளியாய்
வந்தவர்களிடம்-எம்
நாட்டு நிலமைகளை
கொட்டிவிட்ட என்னன்னை
ஏன் இவ்வளவு நாளாய்
சொல்லவில்லை உன் சோகத்தை
என கேட்கும் உங்களிடம்....

நீங்கள் பரிதாபப்படுவதற்காய்

நாங்கள் ஒன்றும்
ஈழத்தில் பிறக்கவில்லை
உச்சுக் கொட்டி செல்வீர்கள்..
அப்புறம்..
வெள்ளி திரையின் மசாலாக்குள்ளும்
மரத்தை சுத்தும் 'டுயட்'க்குள்ளும்
காதலை தேடும் உங்களிடம்
என் மண்ணின் காதலை
எப்படி சொல்லிடுவேன்....

ஒரு நாள் உங்களால்

'கரன்ட்' இல்லாமல்
இருக்கமுடியுமா இல்லை
தொலைக்காட்சி இல்லாமல்
வாழ முடியுமா..
எப்படி சொல்லிடுவேன்
ஒரு சமுதாயமே
கற்கால வாழ்க்கை வாழ்ந்ததை..
நாங்கள் உடுத்திருந்த உடையோடு
ஊர் ஊராய் அலைந்ததை..
உங்கள் 'ரிவி'த்திரையில்
சில எழுத்துக்கள்
வெறும் வார்த்தைகள் தோன்றும்
"மென் இதயங்கள் தவிர்த்துவிடுங்கள்
கொடூரமான காட்சிகள்" என
ஆனால் என் மண்ணிலோ
நித்தம் சிதறிய உடல்களோடு
ரத்தமணத்துடன் நாம்
வாழ்ந்ததை...

நீங்கள் பாருங்கள்

உங்கள் வேலைகளை..
கிரிக்கெட்டில் தொலைந்து
போகவேண்டும்...
உங்கள் ஆதரச நாயகனின்
கட்டவுட்டிற்கு பால் அபிஷேகம்
செய்ய வேண்டும் ..
உங்களுக்கு ஏது நேரம்
எங்களுக்காய்
நின்று நிதானித்து
திரும்பிப் பார்க்க...

நாங்கள்

நாங்களாகவே
பிறந்தோம்..
போராடுவோம்..
சாவோம் ஆனால்
மீண்டும்
புதிதாய் பிறப்போம்..

Friday 14 March, 2008

என்ன சொல்லிடுவேன்..

எதை எழுதுவது...
ஆயிரம் கரு இருந்தாலும்
உங்கள் எண்ணங்களுக்கு என்னால்
வர்ணம் தீட்ட முடியாது..
என் கவிதையில்
கொஞ்சம் காதல் இருந்தால்
யாரைக் காதலிக்கிறாய்
எனக் கேள்வி..
உன் வரிகளில் ஏன்
அனைத்தையும் இழந்துவிட்ட
சோகம் என..

நட்பாய் எழுதி விட்டால்
யார் அந்த ஆண் என..
இத்தனை அம்புகளா
உங்களிடம்..
என்ன சொல்லிடுவேன் நான்..
நிஜங்களும் நிழல்களும்
விடாது துரத்த
எதை எழுதிடுவேன்
....

Wednesday 5 March, 2008

தேர்தல்
நேரங்களில் மட்டுமே
மக்களை தேடும்
கட்சிகள்..
எதற்கு என
தெரியாமலேயே
கை தட்டும் கூட்டம்...
தன் முதுகில்
சவாரி செய்யும்
தலைவனுக்காகவே
வாழ்ந்து மடியும்
தொண்டர்கள்.....
என்று மாறும் இந்த
எழைகளின் வாழ்வு.....
தெருவோர
ஜோசியக்காரன்
குறி சொல்லுகிறான்
வளமான வருங்காலத்தை
எல்லோரிடமும்
எனோ அவன்
மட்டும் அங்கேயே....
எழையின்
வீட்டிலும்
அடுப்பெரிகிறது
குடிசைகள்
தீ வைப்பு !
அன்று
சுடுகாடுகள்
ஊருக்கு

வெளியே -ஆனால்
இன்றோ

எம் ஊரே
சுடுகாடாய்....