Saturday 26 January, 2008

எங்கோ
எல்லையில் நடக்கும்
யுத்ததைப் பற்றி
சிலாகிக்கும் இவர்களிடம்
எப்படிச் சொல்வேன்-என்
தேசத்தில் நாம்
மரணத்திற்குள் வாழ்பவர்கள்
என்று....
.......
வாழ்க்கை

எதிர் பாராததை
எதிர்பார்பதே
வாழ்க்கை !
....
நான் நேற்று தசை பிண்டம்
இன்று கனவுகளிலான உடம்பு
நாளை ஒருபிடி சாம்பல் !
........
நேற்றைய
நினைவுகளை செருப்புக்களாக்கி
நாளைய கனவுக்காய்
நடை போடுவோம்!
......
கோழைகளின்
தற்பாதுகாப்பு தான்
தற்கொலை....
வாழ்க்கையை எதிர்கொள்ள
பயந்து....
..........
மக்களிடம்
கையேந்தியபவர்கள்
வென்றபின்
கை விரிக்கின்றார்கள் !
.......
சொர்க்கத்தில்
மத நல்லினக்க மாநாடு
இங்கிருந்து சென்ற பக்தர்களின்
மதக் கொள்கையால்-அங்கு
சிவனும் விஸ்ணுவும் அல்லாவும்
தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள்
தத்தம் பக்தனுக்காய்.....
.......
மொட்டவிழ்த பின்னும்
பூப்படையா பூவைப்போல
நானும்....
என் பெயர் எனோ
முதிர்கன்னி !
......

காதலும் கவிதையும்
இல்லையென்றால்
இந்த பூமிப்பந்து என்றரோ
வெறி பிடித்த மனித மிருகங்களால்
சிதைக்க பட்டிருக்கும்.....
...........


No comments:

Post a Comment