Thursday 17 January, 2008

என் செல்லக் குட்டிக்கு....


என் செல்லக் குட்டிக்கு....


உன் ஒவ்வொரு
அசைவிலும் எனை
நான் மறந்தேன்..
துள்ளி நீ வரும்போது
என் மனமும் துள்ளும்...
எனை நீ தேடும் போதும்
எனக்காய் -நீ
காத்திருக்கும் போதும்...
ஒவ்வொரு நொடியும்
ஆயிரம் கோடி
சந்தோசங்கள் எனக்குள்!

என் கவலைகளையும்
என் தனிமையையும்
மறக்க செய்தவன் நீ!
உன் கண்கள் ஆயிரம்
கதை சொல்லும்...
எனக்குள் இருக்கும்
பெண்மையின் தாய்மையை
உணரச் செய்தவன் நீ!

நீ கொஞ்சும்
ஒவ்வொரு முறையும்
புதிதாய் பிறப்பேன் நான்!
மனிதர்களிடம் இல்லா
பாசத்தையும் நெசத்தையும்
உன்னிடம் கண்டேன்...

நீ என்னுடன் இருந்தால்
மெளனத்தின் சோகம்
தெரிவதில்லை எனக்கு..
நான் பேசும்
வார்த்தைகளின் அர்த்தம்
தெரிந்தவன் நீ!
நானும் தான்...

என் செல்லமே!
நான் உன்னை நேசிக்கின்றேன்....

1 comment:

மனதின் கிறுக்கல்கள் said...

உயிர்களிடத்தில் அன்பு செய் என்றானொருவன்
உறவொன்றில் உங்கள் உயிர் புதைந்திருப்பது கண்டேன்..
விட்டுப் போனவை எல்லாம் ‘‘வடுக்களை”
விட்டுப் போனவை தான் வாழ்வும்
அப்படி தான்

உங்கள் செல்லக் குட்டியின் பதிவுகளுடன்

Post a Comment