
"சே"!
அமெரிக்க வல்லூறுகளால்
பொலிவியக் காட்டில்
சிதைக்கப்பட வீரனே !
அவர்கள் உன்னை
கொன்று விட்டனர்-ஆனால்
புரட்சியின் பிம்பமாய்
அவர்களே உன்னை
விதைத்து விட்டனர்....
கியூபப் புரட்சியின்
மூளையே-இளைய
தலைமுறைக்கான
விடுதலையின்
அடையாளமாய்-அவர்களே
உன்னை விட்டு சென்றனர்...
புரட்சி நாயகனே!
எங்கே ஓரினம் ஒடுக்கபடுகிறதோ
அங்கெல்லாம் -உன்
பெயர் வாழ்ந்துகொண்டிருக்கும்....
No comments:
Post a Comment