Tuesday 18 March, 2008

எனக்காய் வாழ்வதேற்போது....


பெண்ணாய் பிறந்த நானும்
வாழ்கிறேன் இன்னோருவருக்காகவே
குழந்தையாய் இருந்தபோது
தந்தை என்னும் ஆணின்கீழ்..
கொஞ்சம் வளர்ந்தபின்

சகோதரனோடு
திருமண பந்தத்தால்
கணவன் என்னும் ஆணோடு
நாளை வாழ்ந்திருப்பேன்
மகனுக்காய்...

என் சுயங்களை மறந்துவிட்டு

இல்லை மறைத்துவிட்டு..
எனக்கான
விருப்பு வெறுப்பு
தேடல்கள் ஆசைகள்
அனைத்தையும் தொலைத்துவிட்டு
விரும்பியோ விரும்பாமலோ
ஆணை சுற்றியே
அமைந்துவிட்ட இவ்வுலகம்
எனக்காய் வாழ்வதேற்போது....

3 comments:

Anonymous said...

வாழ்க்கைய யோசிங்க டா, தலையெழுத்த நல்லா வாசிங்க டா
யோசிச்சுப் பாருங்க டா எல்லோரும் ஒன்னா சேருங்க டா
இருக்கிற வரைக்கும் அனுபவிக்க இளமை இருக்குதடா
வருகிற வரைக்கும் லாபமடா வசதிய தேடுங்கடா

Unknown said...

hi sakthi..how r u..i got ur blog site frm one of my frend..really its nice yaar...some mistakes r there in tat..if u dnt mind shal i tell...caz u may use ur tamil..but here its different one..tatz y..

Sakthy said...

நிச்சயமாக சொல்லுங்கள் நண்பரே. உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்,அவையே என்னை திருத்திக்கொள்ள உதவும்

Post a Comment