Tuesday 18 March, 2008

என்வாழ்விங்கே..


ஒவ்வொரு முறையும்
புன்னகைக்கின்றேன்
பார்த்தும் பாராமல் கடக்கும்
உங்களுக்காய்..
ஒரிரு நிமிடங்களே தரித்தாலும்
என் விரல்களால் காற்றோடு
கையசைக்கின்றேன் உங்கள் பார்வை
என்மீது படாதா என்னும் ஏக்கத்துடன்..

தெருவேர வெப்பக்குவியலோடு

நைந்துபோன என்னையின்
புடவையின் வேர்வையுடனும்
என்வாழ்விங்கே...

எல்லோரும் பார்க்கிறீர்கள்

உங்கள் பார்வைகள்தான் மாறுகின்றன
அதிசயமாய்..
அருவருப்பாய்..
முணுமுணுப்புடன் கடக்கும் உங்களுக்கு
எத்தனை வேலைகள்
எனக்காக நிதானிக்க நேரமேது...

நான் என்ன வரமா பெற்றுவந்தேன்

என் வாழ்விங்கே வாழ்வதற்கு..
கோழை ஆணின்
ஒருநேர சுகத்திற்காய் பெற்றுவிட்டாள்
என்னன்னை
என்ன பாவம் செய்து வந்தேன்

ஒற்றை ரூபாயை
வீசியேறியும் கைகளுக்கு
தெரியுமா நான்
நாளை
யாராவெனென்று...

2 comments:

Anonymous said...

super

Sakthy said...

நன்றிகள்

Post a Comment