Friday 14 March, 2008

என்ன சொல்லிடுவேன்..

எதை எழுதுவது...
ஆயிரம் கரு இருந்தாலும்
உங்கள் எண்ணங்களுக்கு என்னால்
வர்ணம் தீட்ட முடியாது..
என் கவிதையில்
கொஞ்சம் காதல் இருந்தால்
யாரைக் காதலிக்கிறாய்
எனக் கேள்வி..
உன் வரிகளில் ஏன்
அனைத்தையும் இழந்துவிட்ட
சோகம் என..

நட்பாய் எழுதி விட்டால்
யார் அந்த ஆண் என..
இத்தனை அம்புகளா
உங்களிடம்..
என்ன சொல்லிடுவேன் நான்..
நிஜங்களும் நிழல்களும்
விடாது துரத்த
எதை எழுதிடுவேன்
....

5 comments:

ILA (a) இளா said...

காதல் கவிதை எழுதுபவர்கள் எல்லாம் காதலிப்பது இல்லை,
காதலிப்பவர்கள் எல்லாம் கவிதை எழுதுவது இல்லை.

நேற்றுப்பட்ட செல்ல் வீச்சு
இன்று பேனாவில் பிறக்கவேணும் ஸ்நேகிதி. அதுதான் எண்ட விருப்பம்

Sakthy said...

நன்றி இளா உங்கள் கருத்துக்கு. நிச்சயமாக தொடர்வேன்.இது என் முதல் முயற்சி, எப்படி இருகிறதோ என தயக்கத்துடன் தொடங்கினேன். உங்கள் விமர்சனத்தை அனுப்புங்கள்.

Anonymous said...

கேள்விகேட்பவர்களுக்கு
பயந்து கவிதையை
விட்டுவிடவேண்டாம்...

Sakthy said...

நன்றிகள் தோழரே

Sakthy said...

நன்றிகள் தோழரே

Post a Comment