Thursday 8 May, 2008


மறந்ததாய் நினைக்கின்ற
சில நிஜங்கள்
இதயத்தில் விழும்
சாட்டை வலிகளாய்
அவ்வப்போது....
எழுத முடியாமல்
வார்த்தைகளற்று
கன்னத்தில் உருளும்
நீர்த்துளிகள்
பேனா மையை கரைத்தபடி.....

ஆயிரம் எண்ணங்கள் உண்டு-ஆனால்
எதனை எழுதுவது...
எங்கிருந்து எழுதுவது...
உங்கள் கற்பனை குதிரைகள்
தறிகெட்டு ஓடி விடும்

நிஜத்தையா
கற்பனையையா இல்லை
என் கனவுகளையா
ஆனாலும்
எழுதிவிட்டேன்
முடிவுகள் உங்கள் கையில்
தொடக்கம் மட்டுமே
என்னிடம்..
முற்றுப் பெறாமலேயே ..

4 comments:

Sakthy said...

நன்றிகள் ....

Anonymous said...

really super

ஜி said...

Attakaasam intha kavithaigal :)) thodarnthu ezuthavum

Sakthy said...

நன்றிகள் ஜி.

Post a Comment