உறக்கமற இரவுகளின்
சுவடுகளை மறைத்தபடி
புன்னகைப்பாய்
அத்தனை வலிகளிலும்
நிறைந்து விடுவேன் நான்
அந்த ஒற்றை நொடிப்பொழுதில்...
Saturday, 31 May 2008
மஞ்சள் பூக்களின் வாசத்துடன்...

அபூர்பமாய் தரிசித்த
அதிகாலை பனியின்
சாலையோர மரங்களோடு நான்..
இரவெல்லாம் உதிர்த்த
மஞ்சள் பூக்களின் வாசம்
அந்த இடத்தை
நிறைத்துக்கொண்டு
அங்காங்கே காத்திருக்கும்
சாலையோர இருக்கைகளிலும்
பாதையெங்கும் படர்ந்திருக்கும் பூக்களை
மிதிக்காமல்
தாண்டிச் செல்லும் மனது
சின்ன குருவிகளின் சந்தோச பாஷையில்
சின்ன குருவிகளின் சந்தோச பாஷையில்
மழை முன்னறிவிப்பு செய்ய
தூறல் சாரளில்..மனது
குழந்தையாய் மாறி குதுகளிக்கும்
அக்கப்பக்க பார்வைகளில்
பொல்லாத நாகரீகம் தடை போட்டு
கமுக்கமாய் பல்லிலிக்கும்
மனமின்றி கிளம்புகையில்
மனமின்றி கிளம்புகையில்
இன்னும் மஞ்சள் பூவும்
மண் வாசனையும்
துரத்தியபடி.......
Thursday, 15 May 2008
நிழல் தேடும் மனசு..
கோடைக்கால கதகதப்பில்
துவண்டு விழும் சருகுகளின் மேல்
உட்கார்ந்திருகிறது வெயில்..
புழுதி பறக்கும் தெருக்களில்
கானல்நீர் அங்கங்கே தலைகாட்ட
நிழல் தேடி அலைகிறது மனசு
கொங்கிறீட் காடுகளில்
பசுமரத்திற்கான தேடலோடு
பரபரக்கும் பார்வைதனை
என்ன சொல்லி ஆற்றிடுவேன்...
நவநாகரீக உலகத்தில்
இயற்கையை வென்று விட்டோம் என
செயற்கை குளிரூட்டியில்
இறுமார்ந்திருக்கும் மானிடனே
பாவம் அஃறிணை ஜீவன்களை
கொஞ்சம் நினைத்தாயா?
துவண்டு விழும் சருகுகளின் மேல்
உட்கார்ந்திருகிறது வெயில்..
புழுதி பறக்கும் தெருக்களில்
கானல்நீர் அங்கங்கே தலைகாட்ட
நிழல் தேடி அலைகிறது மனசு
கொங்கிறீட் காடுகளில்
பசுமரத்திற்கான தேடலோடு
பரபரக்கும் பார்வைதனை
என்ன சொல்லி ஆற்றிடுவேன்...
நவநாகரீக உலகத்தில்
இயற்கையை வென்று விட்டோம் என
செயற்கை குளிரூட்டியில்
இறுமார்ந்திருக்கும் மானிடனே
பாவம் அஃறிணை ஜீவன்களை
கொஞ்சம் நினைத்தாயா?
Monday, 12 May 2008
Thursday, 8 May 2008

மறந்ததாய் நினைக்கின்ற
சில நிஜங்கள்
இதயத்தில் விழும்
சாட்டை வலிகளாய்
அவ்வப்போது....
எழுத முடியாமல்
வார்த்தைகளற்று
கன்னத்தில் உருளும்
நீர்த்துளிகள்
பேனா மையை கரைத்தபடி.....
ஆயிரம் எண்ணங்கள் உண்டு-ஆனால்
எதனை எழுதுவது...
எங்கிருந்து எழுதுவது...
உங்கள் கற்பனை குதிரைகள்
தறிகெட்டு ஓடி விடும்
நிஜத்தையா
கற்பனையையா இல்லை
என் கனவுகளையா
ஆனாலும்
எழுதிவிட்டேன்
முடிவுகள் உங்கள் கையில்
தொடக்கம் மட்டுமே
என்னிடம்..
முற்றுப் பெறாமலேயே ..
சில நிஜங்கள்
இதயத்தில் விழும்
சாட்டை வலிகளாய்
அவ்வப்போது....
எழுத முடியாமல்
வார்த்தைகளற்று
கன்னத்தில் உருளும்
நீர்த்துளிகள்
பேனா மையை கரைத்தபடி.....
ஆயிரம் எண்ணங்கள் உண்டு-ஆனால்
எதனை எழுதுவது...
எங்கிருந்து எழுதுவது...
உங்கள் கற்பனை குதிரைகள்
தறிகெட்டு ஓடி விடும்
நிஜத்தையா
கற்பனையையா இல்லை
என் கனவுகளையா
ஆனாலும்
எழுதிவிட்டேன்
முடிவுகள் உங்கள் கையில்
தொடக்கம் மட்டுமே
என்னிடம்..
முற்றுப் பெறாமலேயே ..
எங்கிருக்கிறாய் நீ ?

எங்கிருக்கிறாய் நீ ?
எப்படி இருக்கிறாய் நீ?
ஒரே இடத்தில்
பக்கத்து வகுப்பறைகளில்
இருந்தபோதும் எத்தனையோ முறை
நேருக்குநேர் சந்தித்த போதும்
ஒருநாள் கூட
பேச முடிந்ததில்லை என்னால்
நீயும் கூடதான்
சிறு புன்னகையை வீசிவிட்டு
சென்றுவிடுவாய்-அதன்
அர்த்தம் புரியாமலேயே
கனவுகளில் மிதப்பேன்
உன் பெயர் கூட தெரியாமலேயே
எப்படி முடிந்தது உன்னை
ரசிக்க என்னால் -என்
நேசத்தை மட்டும்
சொல்ல முடியாமல்
எமை தடுத்தது எது..
இன்று வரை புரியவில்லை
வகுப்புக்குள் நுழைந்ததும்
உன்னை தேடும் என் கண்கள் உன்னை
கண்டபின்பு தானே
என் இருக்கை வரும்-நீ
எனை தேடும் நேரங்களையும்
அறிவேன் நான்!
இப்போது எங்கிருக்கிறாய் நீ
என தெரியாமலேயே
உன் நினைவுகளோடு நான்...
எப்படியிருக்கிறாய்
என் நேசத்திற்குரிய
உயிரே........
எப்படி இருக்கிறாய் நீ?
ஒரே இடத்தில்
பக்கத்து வகுப்பறைகளில்
இருந்தபோதும் எத்தனையோ முறை
நேருக்குநேர் சந்தித்த போதும்
ஒருநாள் கூட
பேச முடிந்ததில்லை என்னால்
நீயும் கூடதான்
சிறு புன்னகையை வீசிவிட்டு
சென்றுவிடுவாய்-அதன்
அர்த்தம் புரியாமலேயே
கனவுகளில் மிதப்பேன்
உன் பெயர் கூட தெரியாமலேயே
எப்படி முடிந்தது உன்னை
ரசிக்க என்னால் -என்
நேசத்தை மட்டும்
சொல்ல முடியாமல்
எமை தடுத்தது எது..
இன்று வரை புரியவில்லை
வகுப்புக்குள் நுழைந்ததும்
உன்னை தேடும் என் கண்கள் உன்னை
கண்டபின்பு தானே
என் இருக்கை வரும்-நீ
எனை தேடும் நேரங்களையும்
அறிவேன் நான்!
இப்போது எங்கிருக்கிறாய் நீ
என தெரியாமலேயே
உன் நினைவுகளோடு நான்...
எப்படியிருக்கிறாய்
என் நேசத்திற்குரிய
உயிரே........
Tuesday, 6 May 2008
காத்திருக்கிறது உனக்கான என் காதல்..
Subscribe to:
Posts (Atom)