Monday 28 April, 2008

திருநங்கையாகிய நான்..

இன்று நான்
புதிதாய் பிறந்தேன்
கேலி பேச்சுக்களும்
குறு குறு பார்வைகளுக்கு
மத்தியில் எனக்கான
சுயத்தை தேடிய பயணத்தில்
என் அடையாளங்களை
தொலைத்துவிட்டு
வீட்டுக்குள்ளேயே
நாடோடியானேன்..
எனக்குள் நானே
முற்றுப்புள்ளிக்கான
தேடிய தேடல்
புதிய பெயரோடு
புதிய மனுசியாய்
நானும்..
ஆனாலும்
தோன்றவில்லை
என்
சுயத்தை அடைந்ததாய்
......

1 comment:

மனதின் கிறுக்கல்கள் said...

கோர்மோன்களின் கோலத்தில்
வேசங்கள் எப்போதும்
வேடிக்கைப் பேச்சுகளாய்
சந்தியில் சிரிக்கிறார்கள்
உள்ளுக்குள் அழுது கொண்டே

திருநங்கைகள் பற்றிய பதிவு புதிய பார்வையோடு

வாழ்த்துகள்

Post a Comment