Thursday, 17 April 2008

வாழ்க்கையின் ஓட்டத்தில்..

என் அத்துவ்வானக் காட்டில்
ஒற்றை வெளிச்சத்துடன்
என் நாட்கள் நகர்கின்றன
விடை தெரியா பல கேள்விகள்
ஆங்காரமாய் பல்லிழித்தபடி
கண்முன்னே..
வாழ்க்கையைப் பற்றிய
பல கனவுகளும் பல பயங்களும்
மாறி மாறி மெளனக்காட்சிகளாய்
வந்து செல்ல..
அங்கங்கே
சித்தாந்தமும் வேதாந்தவும்
தலைகாட்டியபடி..
மொத்தத்தில் பேரலையில்
சிக்குண்ட சிறகைப்போல்
நானும் -ஆனாலும்
அமைதியாக-ஒரு
சலனமில்லா நதியைப் போல
நகர்ந்து கொண்டே...

1 comment:

மனதின் கிறுக்கல்கள் said...

சிறப்புற அமைந்துள்ளது எழுத்து..வாழ்த்துகள்

Post a Comment