Tuesday 22 April, 2008

நம்பிக்கையோடு..

நான்
நேசித்தது எல்லாம்
எங்கோ போனது
தனிமையில் நான்...

என்னைச் சுற்றியுள்ளதோ
இந்த பூமியும்
நம்பிக்கையும் மட்டுமே....

ஒற்றையாய்-ஒரு
வெளிச்சம்!
தொடமுடியாத
தூரத்தில்-ஆனாலும்
தொட்டுவிடுவேன் ஒருநாள்!

இப்போது நான்
உயிர் வசிப்பதன் அடையாளமாய்
என் மூச்சுக்காற்று
மட்டுமே என்னுடன்...

அனைத்தையும் தொலைத்துவிட்டு
இனந்தெரியாத
கனத்த இருட்டோடு
ஸ்நேகமாகின்றோம்
நானும்
என் நிழலும்
நம்பிக்கையோடு.....

4 comments:

Anonymous said...

really supper

Sakthy said...

நன்றி உங்கள் கருத்துக்கு..

ஜி said...

MeeLkavithai rendavathu tahdava vaasikumpothum nalla irukuthu

Sakthy said...

நன்றிகள் ஜி.

Post a Comment