நான்
நேசித்தது எல்லாம்
எங்கோ போனது
தனிமையில் நான்...
என்னைச் சுற்றியுள்ளதோ
இந்த பூமியும்
நம்பிக்கையும் மட்டுமே....
ஒற்றையாய்-ஒரு
வெளிச்சம்!
தொடமுடியாத
தூரத்தில்-ஆனாலும்
தொட்டுவிடுவேன் ஒருநாள்!
இப்போது நான்
உயிர் வசிப்பதன் அடையாளமாய்
என் மூச்சுக்காற்று
மட்டுமே என்னுடன்...
அனைத்தையும் தொலைத்துவிட்டு
இனந்தெரியாத
கனத்த இருட்டோடு
ஸ்நேகமாகின்றோம்
நானும்
என் நிழலும்
நம்பிக்கையோடு.....
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
really supper
நன்றி உங்கள் கருத்துக்கு..
MeeLkavithai rendavathu tahdava vaasikumpothum nalla irukuthu
நன்றிகள் ஜி.
Post a Comment