எம்
அக்கினி குஞ்சுகள்
மூட்டிய தீயில்-உன்
மூச்சுக்குழலில் அல்லவா
மூண்டுவிட்டது நெருப்பு
உன் கோட்டைக்குள்
வெடிக்கும் வெடி
உனக்கு சாவுமணியல்லவா
உங்கள் இரும்புக்கோட்டை
கனவுக் கோட்டையானதே
தமிழர் படையால்..
துட்டகைமுனு கொன்ற
எல்லாளன் அல்லவா
புதுபிறவி எடுத்துயிருக்கிறான்
புலி மறவராய்..
எம் ஊர்களில்
கந்தக நொடி வீசியவனே
பொறுத்துக்கொள் இனி
உன் இதயத்திற்குள்ளும்
வெடி வெடிக்கும்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment