இனிய நட்பே
கடிதங்களில்
நம் உறவு தொடரும்
அந்நியம் வரும் என்று
நினைத்திருப்போமா..
எவ்வளவு அழகான
நாட்கள் அவை...
நாம் ஒன்றாய் இருந்த
அந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும் இப்போதும்....
போர் மேகங்கள் சூழ்ந்த
நம் நாட்டிலும்-நாம்
எவ்வளவு சந்தோசமாக
இருந்தோம்..
நாம் பிரிந்தாலும்
எம் நேசம் என்றும்
பிரியாமல் வாழட்டும் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment