Sunday 30 November, 2008

நினைவுச் சின்னமாய்...


சுட்டுச் செல்கிறது
முதல் முறையாய் கண்ணீர்
வழிந்த கன்னத் தடத்தில்
அமில எரிச்சல் ...

உச்சியில் நிற்பதாய்
கொக்கரித்த மனம் -இன்று
தலை கீழாய் விழுந்ததில்
துண்டு துண்டாய் இதயம் ...

பாதரசமழிந்த கண்ணாடியில்
கீறுபட்ட கோடுகளினோடு
கை கொட்டி சிரிக்கிறது
என் முகமூடி ...

தோற்றுப் போக மாட்டேன்
என தொங்கி நின்ற மனதை
'பெவிக்கால்' ஒட்டி
பத்திரப் படுத்துகிறேன் ...


சில நம்பிக்கைகள் அழிந்ததால்
சில தோல்விகள் வலிக்கின்றன
நாளை அனுபவம் என்று சொல்லி
அதுவும் கண் சிமிட்டும் ..

நாளைய நினைவுகளுக்கு
நினைவுச் சின்னமாய்
இருந்து விட்டுப் போகட்டும்
என் இதயம் ...

No comments:

Post a Comment