Sunday, 2 November 2008

புன்னகைப் பூவிற்கு ஒரு அஞ்சலிக் குறிப்பு ..


செல்வமே தமிழரின் செல்வனே..
தமிழ்ச் செல்வனே..
போராட்ட வாழ்க்கையில் புன்னகையால்
அறியப்பட்ட எம் அண்ணனே ...

களங்களில் சமராடுகையில் தீரம் காட்டினாய் ..
அரசியல் மேடைகளில் விவேகம் காட்டினாய் ...
தெரிந்தவனுக்கு உங்கள் புன்னகை புரியும்
தெரியாதவனுக்கு உங்கள் புன்னைகை தெரியும் ..

அதன் அர்த்தத்தின் ஆழத்தை
தலைவன் மட்டுமே அறிந்திருப்பார் ....
உம்முடன் இருந்த தோழர்களும் தான் ..
அறுவருடன் ஆகுதியான எம் அண்ணலே ..
ஓராயிரம் ஆண்டானாலும் - எம்
நினைவுகளில் வாழ்வீர் !

உலகமெங்கும் சாமாதான பிரதிநிதியாய்
உலாவந்த செல்வனே ..
வலுவிழந்த கால்களோடு போராடிய
உன் சிறகுகளை சிதைத்தல்லவா
சிங்கள வல்லூறுகள் கொக்கரித்தது ...

உம் வீரம் மட்டுமல்ல புன்னகையும்
காலம் காலமாய் கதை சொல்லும் ..
நின்மதியாய் துயில்வாய் எம் அண்ணா
நாளை நாம் தூவும் விடியல்
மலர்களில் உன் புன்னகையும்
மீண்டும் பூப்பூக்கும் .....

4 comments:

Anonymous said...

really nice poem.

Anonymous said...

அருமை, அருமை உங்கள் கவிதை மிகவும் நன்றாக உள்ளது.

Sakthy said...

நன்றிகள் ..

Sakthy said...

நன்றிகள் நிரந்தன்.. உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்

Post a Comment