Thursday, 11 December 2008

சுயம் தொலைத்தவள் ...


கல்யாண கனவுகளில்
காத்திருந்தேன் நானும் ...
ஒருநாள் பொழுதொன்றில்
ஆடவனின் வலிய கரங்களுக்குள்
அடங்கிப் போனது என் பெண்மை ..

ஒரு புது உலகம் ,புதிய உறவுகள் ...
புரிந்தும் புரியாமலும் ஒரு வாழ்க்கை ...
காதலாய் காத்திருந்த நாட்கள் போய்
கொஞ்சம் கொஞ்சமாய் மனித விகாரங்கள்
பல்லிளிக்க தொடங்க
வார்த்தைகள் சாடையாகின்றன..

உன் ஆண்மையின் பெயர் சொல்லி
வதைக்கும் கணங்களில்
கரையும் கண்ணீரில்
பொசுங்குகிறது என் காதல் ...

என் சுயம் எழுந்து வீரிடுகையில்
பெண் ,பொறுமையின் அடையாளம் என்கிறாய்
பழைய பஞ்சாங்கங்க நளாயினி
அருந்தி,வாசுகி என பட்டியளிடுகிறாய்
உன் இன அயோக்கியர் பெயர்
தெரிந்திருந்தும் மௌனிக்கின்றேன்...

என் ரொக்கங்களை அள்ளிய
உன் கரங்கள் அவ்வப்போதும்
அணைக்கத்தான் செய்கின்றது
அடியின் வலிகளும் ரணங்களும்
அழுகின்றன ஊமையாய் ...

என் விருப்புக்கள் ஆசைகள்
எல்லாம் மறைந்துவிட்டு
மறந்து விட்டு
வேற்று மனுசியாகிறேன்
எனக்குள் நானே ..

2 comments:

Anonymous said...

உன் ஆண்மையின் பெயர் சொல்லி
வதைக்கும் கணங்களில்
கரையும் கண்ணீரில்
பொசுங்குகிறது என் காதல் ...

really nice

Sakthy said...

நன்றிகள் அண்ணா உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் ...

Post a Comment