நீ கொடுப்பதை எல்லாம் எடுத்துக் கொண்டு
திருப்பிக் கொடுப்பதென்ன?
பசுமைசூழ் இவ்வுலகத்தை
பசுமைசூழ் இவ்வுலகத்தை
பாழ்வெளியாக்கி விட்டு
மானிடப்பிறவி நாமென மார்தட்டி நிற்கின்றோம்
காடுகளை மொட்டையாக்கி
கொங்கிரிட் சுவரெழுப்பி
மேகத்தை தொட்டவனே
உன் மகத்துவத்தை என்ன சொல்ல..
மழைத்துளிக்கு பதிலாய்
மழைத்துளிக்கு பதிலாய்
அமிலமழை பெய்ய வைத்தாய்
என்னவாகும் பூமி ?
காற்று
மண்டலத்தை கரியமிலமாக
மாற்றி விட்டு
நுரையீரல் வெடிக்க
மூச்சு முட்டுகிறாள் உன் அன்னை..
இருக்கும் மரத்தையெல்லாம் வெட்டி தள்ளி
இருக்கும் மரத்தையெல்லாம் வெட்டி தள்ளி
கர்ப்பிணி மேகத்தை கருகலைப்பு செய்தாய்
இப்போது மறக்காமல்
மழை வரம்
வேண்டி கழுதைக்கு கலியாணம் வேறு
ம்ம்ம்ம்ம்
இன்னும் இரங்குகிறாள் இல்லை பார் ..
ஓசோன் கூரையில் ஓட்டை போட்டாய்
ஓசோன் கூரையில் ஓட்டை போட்டாய்
அந்தாட்டிக் பனிபாறைகள் உருகி வழிகின்றன ..
அணுகுண்டு சோதனை என ஆளாளுக்கு
வெடித்ததில் பூமிப்பந்தே
கறுத்துக் கொண்டிடுக்கிறது .....
பிறக்கும் தேவதைக் குழந்தைகள்
இப்போது சிறகுமட்டுமல்ல
அங்கங்கள் இல்லாமல்
அவலட்சணமாய் வருகிறார்கள் ..
ம்ம்ம்ம்
நீ தொடர் உன் வேலையை ...
காற்று நசுங்கும் போக்குவரத்து நெரிசலில்
காற்று நசுங்கும் போக்குவரத்து நெரிசலில்
சுவாசம் எல்லாம் தூசுபடலம்
தும்மினால் கூட கரிக்கும் மூக்கு ....
போதாக் குறைக்கு மணல் வாரித் தின்று தீர்த்து
உன் மடியெல்லம் வளிச்சாச்சு ..
நீர் நிலைகள் வற்றி பசித்தவன் வயிறுபோல்
நீர் நிலைகள் வற்றி பசித்தவன் வயிறுபோல்
வெடித்து காய்கின்றன
2075 ல் குடி தண்ணீர் இருக்காதாம்
பரவாயில்லை விடு
அதுவரை நாம் என்ன
உயிர் வாழவா போகிறோம் ..
இன்னும் என்ன வைத்திருக்கிறாய் சொல்லிவிடு
பறித்துக் கொள்ள நாம் மீதமிருக்கின்றோம்
பெற்ற தாயை மூளியாக்க ஆசைப்படும்
பிள்ளைகள் நாங்கள்...
ஆனாலும் சந்திரனுக்கே
ராக்கெட் விடும் அதி புத்திஜீவிகள் ..
நாளைய தலைமுறைக்கு
நாளைய தலைமுறைக்கு
நாம் என்ன விட்டு செல்வோம் ?
கந்தக நெடி விசும் காற்றையா..
கந்தக நெடி விசும் காற்றையா..
பிளாஸ்ரிக் பூக்களின் தோட்டத்தையா ...
கார்பன் வாயுவால் வீங்கி வெடிக்கும்
மொட்டைக் மலைக் காடுகளையா .....
நாளைய உலகிற்கு
நாம் என்ன விட்டுச் செல்வோம் ?
3 comments:
நல்ல கருத்துள்ள கவிதை ஸ்னேகிதி
அன்பின் ரிஷான்
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிகள் தோழரே..
ovovoru varthaiyum sinthikiran sindhanai alaigalai......
Endrum anbudan,
S.Sathish kumar
Post a Comment