
என் கனவுகளை
மொத்தமாய் உன்னிடம்
அடகு வைத்து நின்ற வேளையிலும்
உன் பார்வைக்காய்
கால் கடுக்கக் காத்திருந்தபோதினிலும்
உன் நேசம் எனக்கானதாயில்லை
என் ப்ரியம் சொல்லிக் காத்திருக்கையில்
என் மனக் கனவுகளை உதைத்தழித்தாய்
இப் பிரபஞ்சததைவிட அதிகமாய்
உனக்காய் நான் சேமித்ததெல்லாம் பறித்துக்
மொத்தமாய் உன்னிடம்
அடகு வைத்து நின்ற வேளையிலும்
உன் பார்வைக்காய்
கால் கடுக்கக் காத்திருந்தபோதினிலும்
உன் நேசம் எனக்கானதாயில்லை
என் ப்ரியம் சொல்லிக் காத்திருக்கையில்
என் மனக் கனவுகளை உதைத்தழித்தாய்
இப் பிரபஞ்சததைவிட அதிகமாய்
உனக்காய் நான் சேமித்ததெல்லாம் பறித்துக்
கேலி செய்து விலகிச் சென்றாய்
நிஜம் உறைக்க மெல்ல விழித்து
என் இதயச் சில்லுகளில் உன்
சுவடழித்து நிமிர்கையில்
சிரித்து நிற்கிறாய்
என் காதோரம் கிசுகிசுக்கிறது
உன் மூச்சுக்காற்று
'என் நேசம் உனக்கே தானென்று' .....
நான் நேசித்த ஜீவன்
காயப் படுத்தி விடக்கூடாதென்று
விலகி நடக்கிறேன்
தனித்து வந்த பாதையில்
வெகுதொலைவு கடந்தபின்
நானுணர்ந்த வலி
உனக்கும் வேண்டாமே
மீண்டும் நாம் சந்தித்தால்
நிதானமாய் நலம் விசாரிப்போம்
தத்தம் துணையோடு..
அதுவரை வாழ்ந்திடலாம்
நீ நீயாயும்
நான் நானாயும்..