Thursday 31 July, 2008

அழகான அந்த மாமரம் அடிக்கடி நினைவில் வரும்...


அடர்ந்து பரந்த
மரக்கிளைகளில்
கலர் சொல்ல தெரியா நிறத்தின்
இளங்குருத்தின் வாசத்தை
சுவாசத்தில் ஏற்றி காத்திருப்போம் நாம்
அண்ணாந்து பார்த்தபடி
முதல் மாம்பிஞ்சு துளிர்விடும்
அந்த ஒற்றை நாளிற்காய்...
பூ விடும் காலத்தில்
எம் மாமர ஊஞ்சலுக்கு
விடுமுறை கொடுக்கும் அப்பா
எம்மை தொட்டுப் பார்த்து
ஏங்க வைப்பார்
அந்நேரங்களில்...
பிஞ்சுகள் வர தொடங்க
சொல்லி வைத்தாற்போல்
எப்படித்தான்அந்தனை குருவிகளும் ,பறவைகளும்
வருகின்றன என எண்ணி வியந்ததுமுண்டு
பலவித குரல் எழுப்பி தம்
வருகையை ஆர்ப்பாட்டமாய்
முன்னறிவித்தபடி எம்மை போலவே
காத்திருக்கின்றனவோ..
கொஞ்சம் கொஞ்சமாய்
மாம்பிஞ்சுகள் உருமாறத் தொடங்க
மரத்திலேயே கடித்து வைத்து
நாமும் அணில் பிள்ளைகளாவோம்..
'கறுத்த கொழும்பான்'
நினைக்கவே இனிக்கின்றது...
இங்கும் விதம் விதமாய் மாம்பழங்கள்
புது பெயர்களில்,புது வடிவத்தில்...
இன்று வரை என்கண்களில் படவில்லை
எம் ஊர் 'கறுத்தக்கொழும்பான்'

எங்கள் மரத்தில் பழுக்க தொடங்க
ஊரே மணக்கும் வாசம்..
அரிசி பானையிலும், வைக்கோலுக்குள்ளும்
ஒளித்து வைத்து பழுக்க வைத்த நாட்கள்
நினைவுகளை வருடுகிறது
பல நேரங்களில் சந்தோச தொல்லையும் கூடத்தான்
மூன்று நேர சாப்பாடும் மாம்பழத்தோடு முடிவதும் உண்டு..
அந்தேரங்களில் இந்த மரத்தை
சபித்த நேரங்களும் உண்டு..
இன்றும் அம்மாவின் வார்த்தைகளிலும்
எம் வெளி சொல்லா நினைவுகளிலும் வாழ்கிறது
அந்த மாமரம்..
அதன் கீழ் வெடிய பதுக்கு குழிக்குள்
இருந்து மாங்காயோடு கழிந்த
அந்த இருண்ட நாட்களும் ...
நினைவில் நிற்பது
பழத்தின் வாசம் மட்டுமல்ல
நாம் தொலைத்த வாழ்க்கையும் தான்

இப்போதும் நீ
பூ பூப்பாய் பிஞ்சுகள் தொங்கும்
ஊரே மணக்கும்
அணில் கடி கடிக்க
நாங்களும் இல்லை....
அணில் ,குருவிகளும் அற்று....




8 comments:

Anonymous said...

very nice! hahahahaha

Anonymous said...

ive done something here to have you a few cents!

shaam said...

Hi My Dear Great Friend,
I read ur new poet really nice da.. after reading ur poet fully I remember ur Mother told me about this mango tree before..You described fully in ur Words and nice to see this in poet. keep it up da.. day by day u becoming wiser da. and do read Poet abt Youngster in india wasting time ....

k da keep rocking ..
u continue ur success

Anonymous said...

மாமரங்களுடன் களிந்த
அந்த இளமைக்காலங்கள்
அற்புதமானவைதான்...
அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்

விடுமுறையில் வந்த எனை
வீடுவந்து சந்தித்ததற்கு மிக்க நன்றி
தங்கச்சி

ஜியா said...

:))) Gud one...

Sakthy said...

நன்றிகள் அண்ணா..

Sakthy said...

நன்றிகள் ஜி உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்..

Sakthy said...

நன்றிகள் தோழா...

Post a Comment