
காகித முகத்தை கத்தரித்து
புன்னகைப் பூவை ஏந்தி நிற்போம்
நகர்ந்து செல்லும் நதியிலிருந்து
நழுவி விட்ட கூழங்கல்லாய்
நனையட்டும் இதயம் ..
காய்ந்து போன கண்ணீர் துளிகள்
கொஞ்சம் கொஞ்சமாய் வைரமாகட்டும்
காற்றுக் கூட காத்திருந்து மூச்சாகட்டும்
காற்றுக் கூட காத்திருந்து மூச்சாகட்டும்
அச்சுவாசத்தில் புது சுகந்தம் பரவட்டும்
பழமைகள் மங்கிப் போய் புதைந்தழிய
பழமைகள் மங்கிப் போய் புதைந்தழிய
அச்சம்பலினுடே புதுமைகள் துளிரட்டும் ..
கோபங்களும் அவமானங்களும்
விழிகளில் தீப்பந்தமாய் மாற
கொஞ்சம் தீ பரவி சுயத்தை சூடக்கட்டும்
பெருமூச்செல்லாம்
புயலாகி வழி சமைக்கட்டும் ..
அந்த கானக வழியினுடே
அந்த கானக வழியினுடே
கனவுக் குதிரைகள்
தறிகெட்டு ஓடட்டும்..
1 comment:
arumai...... puliyayae kinnuteenga po... but u r busy..... tc
Post a Comment